Did you Saw a UFO..??

You saw Something in the Sky which you cant explain..??
Please report it to MUFON (Mutual UFO Network)

MUFON Link

ParakkumThattu ®

ParakkumThattu ®

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

2012 -ம் மாயா இன மக்களும்.. 2


2012 -ம் மாயா இன மக்களும்.. 2


"இந்த கட்டுரை தொடர் திரு.ராஜ்சிவா அவர்களால் உயிர்மை.காம் தளத்தில் எழுதப்பட்டது. முழுகாப்புரிமை படைப்பாளரையே சாரும்.." -- வேற்றுகிரகவாசி




முற்குறிப்பு: நான் எழுதப் போகும் மாயா பற்றிய இந்தத் தொடர் பற்றிஉங்களுக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கலாம்அவற்றை எல்லாம்எடுத்த எடுப்பிலேயே மறுக்க வேண்டும் என்று தயவுசெய்து உடன் மறுக்க வேண்டாம்இந்தத் தொடரை நான் முடிக்கும் வரை பொறுத்திருங்கள்பலருக்கு இது பகுத்தறிவுக்கு ஒத்துவராதஅறிவியல் ஒத்துக் கொள்ளாத சம்பவங்களாக இருக்கும்உண்மைதான்நானும் உங்களைப் போன்ற அறிவியலை நம்பும் ஒருவன்தான்எனவே முடிவு வரை பொறுத்துக் கொண்டுஇதை வாசியுங்கள்.

கடந்த தொடரில்சுவடே இல்லாமல் ஒரு இனம் எப்படி அழிந்திருக்கலாம் என மாயாக்கள் வாழ்ந்த இடங்களை ஆராயச் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்தது ஒரு மாபெரும் அதிர்ச்சிமாயாக்கள் விட்டுச் சென்ற கல்வெட்டுகளை ஆராய்ந்த அவர்களை பிரமிப்பின் உச்சிக்கே கொண்டு சென்றது அது.சரிஅப்படி என்னதான் நடந்ததுஅங்கு என்னதான் இருந்தது? என்ற கேள்வியுடன் கடந்த பதிவில் விடைபெற்றோம் அல்லவா..?

அதை உங்களுக்கு விளக்குவதற்கு முன்னர்வேறு ஒரு தளத்தில் நடந்தவேறு ஒரு சம்பவத்துடன் இன்றைய தொடரை ஆரம்பிக்கிறேன்இப்போது சொல்லப் போகும் இந்தச் சம்பவத்துக்கும்மாயாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைஆனாலும் வேறு வகையில் சம்பந்தம் உண்டு.

இராஜராஜ சோழன் என்னும் மாபெரும் தமிழ் மன்னனை யாரும் மறந்திருக்க மாட்டோம்தமிழ்நாட்டில் கி.பி985ம் ஆண்டு முதல் கி.பி1012 ஆண்டு வரை தஞ்சையை தலைநகராகக் கொண்டு அரசாண்டு வந்த சோழ மன்னன்தான் இராஜராஜன்.இன்றும் உலகம் தமிழனைத் திரும்பிப் பார்க்கும் வண்ணம்அவன் உலக அதிசயங்களுக்கு நிகரான ஒரு அழியாச் சின்னத்தைக் கட்டினான்அதுதான் தஞ்சையில் அமைந்துள்ள, 'தஞ்சைப் பெரிய கோவில்என்றழைக்கப்படும் பிரமாண்டமான கோவில்.

அதன் மிகப் பிரமாண்டமான இராஜகோபுரம் மிகவும் அழகான கலை நயத்துடன் கட்டப்பட்டதுஅதில் யாருமே எதிர்பார்க்காத விசேசம் ஒன்று இருந்ததுதான் இங்கு நான் ராஜராஜ சோழனை இழுப்பதற்குக் காரணம்.ஆம்அந்தக் கோபுரத்தில் காணப்பட்ட ஒரு உருவச் சிலை எல்லாரையும் புருவத்தை உயர்த்த வைத்ததுஒரு இந்துக் கோவில் கோபுரத்தில் இது சாத்தியமாஎன்னும் கேள்விகள் ஒலிக்கும் வகையில் இருந்தது அந்த உருவச் சிலைகோபுரங்களில் இந்துக்களின் நாகரீகங்களையும்கலைகளையும்தெய்வங்களையும் சிலைகளாக வடிப்பதுதான் நாம் இதுவரை பார்த்தது.

ஆனால் இது........! அப்படி அந்தக் கோபுரத்தில் இருந்த உருவச் சிலை என்ன தெரியுமா....?ஒரு மேலைத் தேச நாட்டவன்தலையில் தொப்பியுடன் காணப்படுகிறான்தஞ்சை மன்னனுக்கும் இந்துக்களின் ஆச்சாரத்துக்கும் ஏற்பே இல்லாத் தன்மையுடன் அந்தச் சிலை பெரிதாகக் காட்சியளிக்கிறது.
அந்தப் படம் இதுதான்........!







"முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சுப் போடுவது போலஎன்று சொல்வார்களேஅது போல இந்த மேலைத்தேச மனிதனின் சிலைபாரம்பரியமிக்க இந்துக்களின் கோபுரத்தில் அமைந்திருக்கிறது என்றால்அதற்கென ஒரு காரணம் நிச்சயமாக இருந்தே தீருமல்லவா...?

இராஜராஜ சோழனின் காலத்தில் யவனர்களாக வந்துஎமது கோவிலிலேயே உருவமாக அமைவதற்குஅந்த மேற்குலகத்தவனுக்கு வரலாற்றில் பதிவாகாத வலுவான காரணம் ஒன்று இருந்திருக்கும் அல்லவா…?ஆனால்அதை ஆராய்வதல்ல இப்போது எங்கள் வேலை.

சம்பந்தமே இல்லாத இடத்தில்சம்பந்தமே இல்லாதவர்கள் தொடர்புபட்டிருப்பார்கள் என்பதற்கு எம்முள்ளேயே இருக்கும் சாட்சிதான் இதுஇந்தச் சம்பவம் போலத்தான் மாயா சமூகத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களுக்கும் சம்பந்தமே இல்லாத வடிவங்களில் ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த ஆச்சரியமும் முடிச்சுப் போட முடியாத மூச்சை அடைக்கும் ஆச்சரியம்தான்தஞ்சையில் யவனன் இருந்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லைஆனால் மாயா இனத்தில் இருந்தவை திகைக்க வைத்தது.அவை என்ன தெரியுமா……..?

மாயாக்களின் கல்வெட்டுகளை ஆராய்ந்தபோது அங்கு கிடைத்த சித்திரங்களிலும்சிலைகளிலும் வித விதமாக அயல்கிரக வாசிகளின் உருவங்கள்தான் காணப்பட்டன.

அட….! இதுவரை இந்த மனிதன் நல்லாத்தான் பேசிக் கொண்டிருந்தார்இப்ப என்ன ஆச்சு இவருக்கு என்று நீங்கள் நினைப்பது புரிகிறதுஆனால் அது உண்மை என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகவும் இருந்தது.என்ன இது புதுக்கதையாக இருக்கிறதே என்பீர்கள்.

உண்மைதான்புதுக்கதைதான்புதுக்கதை மட்டும் அல்லபுதிர்க்கதையும் கூடஎனவே அவை பற்றி நிறைய எழுத வேண்டும்அதனால் முதலில் முன்னோட்டமாக மாயாக்களிடம் கண்டெடுத்த ஒரு படத்தைப் போடுகிறேன் நீங்களே பாருங்கள்.





ஏதாவது தெரிகிறதாஅல்லது புரிகிறதா…?நவீன யுகத்தினர் விண்ணுக்கு அனுப்பிய ராக்கெட்டின் வடிவை ஒத்ததும்அந்த ராக்கெட்டை இயக்கும் ஒரு மனிதன் சாய்ந்த நிலையில் அமர்ந்திருக்கும் அமைப்பிலும் ஒரு சித்திரம் கண்டெடுக்கப்பட்டதுஅது சதுர வடிவிலான கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறதுஒரு மனிதன் சாதாரணமாக அப்படி அமர்ந்திருக்க எந்த ஒரு தேவையும் இல்லாத விதத்தில் அமைந்த சித்திரம் அது.

மாயன் வாழ்ந்த இடங்களில் அமைந்த பிரமிடுகளுக்கள் ஒன்றில் அமைந்திருந்த சுரங்கத்தில் அவர்களின் அரசன் ஒருவன் புதைக்கப்படிருக்கிறான்அந்த அரசனின் உடலை வைத்து மூடிய இடத்தில் இந்தச் சித்திரம் கண்டெடுக்கப்பட்டதுஇந்தச் சித்திரத்தில் இருப்பது மாயன்களின் அரசனாக இருப்பதற்கும் சான்றுகள் உண்டு என்றாலும்அந்தச் சித்திரம் ஏன் அப்படி வரையப்பட்டிருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.சரிஇது தற்செயலாக நடந்த ஒன்றாக இருக்கலாம் அல்லது இந்தச் சித்திரம் வேறு எதையோ குறிக்கலாம் என்று ஒதுங்கப் போனவர்களுக்குஅவற்றுடன் கிடைத்த வேறு பல பொருட்கள் சந்தேகங்களை மேலும் வலுவடையச் செய்தது.

அப்படி என்னதான் கிடைத்தன..?



 நன்றிராஜ்சிவா / உயிர்மை.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக