Did you Saw a UFO..??

You saw Something in the Sky which you cant explain..??
Please report it to MUFON (Mutual UFO Network)

MUFON Link

ParakkumThattu ®

ParakkumThattu ®

வெள்ளி, 13 டிசம்பர், 2013

மெக்ஸிகோ நாட்டின் எரிமலையில் பறக்கும் தட்டு..

9 டிச. 2013
மெக்ஸிகோ.


பறக்கும் தட்டுகள் பற்றி தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிகழ்வுகளை பார்த்து,கண்காணித்து வருபவர்களுக்கு இந்த விஷயம் ஆச்சரியம் அளிக்காது.. ஏனென்றால் உலகின் எந்த பகுதியில் உள்ள எரிமலை குமுற தொடங்கினாலும் அந்த எரிமலையின் அருகில் அடிக்கடி பறக்கும் தட்டுகள் தென்படுவது பல ஆண்டுகளாக நடந்து வரும் விஷயம்..

இப்படி எரிமலைகளில் பறக்கும் தட்டுகள் தென்பட பல காரணங்கள் கூறப்படுகின்றன..

1. எரிமலைகள் குமுறும் போது மிக,மிக அதிக அளவில் சக்தி வெளிப்படுகிறது
அந்த சக்தியை பெறுவதற்காக..

2. எரிமலைகள் குமுறும் போது பூமியின் வெகு ஆழத்தில் உள்ள மிக அரிதான
உலோகங்கள் பொங்கி மேலே வ்ருகிறது.. அந்த உலோகங்களின் பயன்பாடு நமக்கு தெரியாது,ஆனால் வேற்றுகிரகவாசிகளுக்கு அவை மிக அவசியம்..

3. வேற்றுகிரகவாசிகள் வேறு கிரகத்தில் இருந்து பூமிக்கு வர பல மில்லியன் ஒளிவருடங்கள் ஆகும்.. ஆனால் பூமியின் அடிஆழத்தில் வேறொரு பரிமாணத்தின் நுழைவு வாசல் (Dimensional Portal) உள்ளது. இது வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்ல ஒரு குறுக்குவழி..

என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.. காரணம் எதுவாக இருந்தாலும் இது நடப்பதென்னவோ உண்மை..

முன்பு இந்த விஷயம் அவ்வளவாக வெளியே தெரியாது.. ஆனால் தற்போதுள்ள தொழில் நுட்பத்தின் காரணமாக எரிமலை பொங்க போகும் தகவல் வெளியான உடனேயே அனைத்து தொலைக்காட்சி,பத்திரிக்கைகள் அங்கு நிகழ்பவற்றை ஒளிபரப்புகின்றன. அந்த காமிராக்களில் ஏதேச்சையாக பறக்கும் தட்டுகள் படம் பிடிக்க படும் போது அந்த வீடியோவின் நம்பகதன்மை அதிகரிக்கிறது..

இதே போல் தான் சமீபத்தில் பொங்கிய மெக்ஸிகோ நாட்டின் எரிமலையில் பறக்கும் தட்டு ஒன்று வேகமாக எரிமலையின் உள்ளே செல்கிறது. அந்த வீடியோ மற்றும் பல எரிமலைகளில் தென்பட்ட பறக்கும் தட்டுகள் பற்றிய வீடியோக்கள் உங்களுக்காக இங்கே..







வெள்ளி, 1 நவம்பர், 2013

ஆதிகால வேற்றுகிரகவாசிகள்.. 01

வணக்கம்,

வேற்றுகிரகவாசிகள்,பறக்கும்தட்டுகள் மற்றும் பல மர்மங்கள் பற்றி நான் கடந்த சில வருடங்களாக படித்து ஆராய்ந்த பல காரணிகளை கொண்டு இந்த குறுந்தொடரினை எழுதப்போகிறேன். இதில் நான் நிருபிக்க முயலும் கருத்துகள் புதியன அல்ல..

 Erich von DänikenZecharia Sitchin,Robert K. G. Temple Giorgio A. Tsoukalos போன்ற பல ஆய்வாளர்களால் கூறப்பட்ட கருத்துகள் தான் என்றாலும் நம் தமிழர்களுக்கு இது புதிது.. 

இந்த தொடரில் நான் கூறுப்போகும் கருத்துகள் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்,உங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானதாக இருக்கலாம்.. ஆனால் மதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதல்ல என் நோக்கம். மாறாக இனி மதத்தை,மதசடங்குகளை ஒரு புதிய கண்ணோட்டத்தில் உங்களை பார்க்க செய்வதே என் நோக்கம். நன்றி..
                                                                                                         
                                                                                                                                               - செந்தில்




கடவுள்..

ஒவ்வொரு மதமும் கடவுளை ஒவ்வொரு வகையில் காட்சிப்படுத்துகிறது..
நம் மனித சக்திக்கு மேலாக ஒரு சக்தி இருக்கிறது. அதன் பெயர் கடவுள் என்றால் ஆம் கடவுள் இருக்கிறார்.. அதனை நான் பூரணமாக நம்புகிறேன்..  ஆனால் நீங்கள் நம்பும் எந்த மதத்திலும் கூறப்பட்ட /கற்பிக்கப்பட்ட கடவுள் அல்லது கடவுள்களை நான் நம்பவில்லை. 

மனிதர்களால் உருவாக்கப்பட்டவை மதங்கள்.. மனிதன் தவறு செய்வதில் பெயர் பெற்றவன்.. அப்படியிருக்க அந்த தவறுகள் கடவுளை புரிந்து கொள்வதிலும்,மதத்திலும் நிறைய இருக்காதா..??

யார் கடவுள்..?? விஞ்ஞானம் அறியாத,நெருப்பை காட்டுத்தீயில் மட்டுமே பார்த்த, தீ என்பது கடவுள் உண்டாக்கியது என நம்பும் ஒரு ஆதிவாசி இனத்தின் முன் உங்களால் ஒரு லைட்டரிலிருந்து நெருப்பை கொண்டுவர முடிந்தால் நீங்கள் தான் அவர்களின் கடவுள்.. இதை உங்களால் மறுக்க முடியுமா..???

சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நம் முன்னோர்களும் அப்படித்தானே இருந்திருப்பர்..?? அவர்கள் கடவுளாக நினைத்தது கடவுளாக இல்லாமல் நம்மை விட விஞ்ஞானத்திலும்,அறிவிலும் பெரிய வேற்றுகிரகவாசிகளாக இருந்திருந்தால்..?? 

நம் வரலாற்றிலும் இது தான் நடந்திருக்கிறது.. ஆதிகாலத்தில நம் முன்னோர்கள் கண்ட  பல நிகழ்ச்சிகள் அவர்களால் புரிந்து கொள்ள முடியாத,விளக்கம் அளிக்க முடியாதவை. அவர்களை பொறுத்தவரை அது ஒரு மேஜிக்..  “நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத ஒன்றை ஒருவன் சாதாரணமாக செய்கிறான், அவனது தோற்றம் நம்மை விட வித்தியாசமாக இருக்கிறது, நாம் கேட்டதை தருகிறான்.. எனவே அவன் கடவுளாக தான் இருக்க வேண்டும்..” இது தான் நம் முன்னோர்கள் எண்ணியது.


தொடரை ஆரம்பிப்பதற்கு முன் சில கேள்விகள் உங்களிடம்..


 1. மகாமக புராணம் & விவிலிய பழைய ஏற்பாடு

 i) பிரளய காலத்தில் பாவங்கள் அதிகரித்த உலகத்தை வெள்ளத்தால் அழிக்க சிவன் முடிவு செய்தான். எல்லா உயிர்களும் அழிந்த்துவிட்டால் இனி எப்படி உயிர்களை படைப்பேன் என்று வருந்திய பிரம்மனிடம் உலகின் அனைத்து உயிர்களையும் படைக்க தேவையான ஜீவாமிர்தத்தை ஒரு மண் கும்பத்திலிட்டு அதை மேரு மலையில் வைக்க சிவன் சொன்னதாக இந்து புராணங்கள் கூறுகின்றன.

      ii) கடவுள் மனிதரின் தீய செயல்களை கண்டு கோபமுற்றவராக உலகை வெள்ளத்தால் அழிக்க எண்ணினார். அவர் அம்மனிதரிடையே ஒரே ஒரு நீதிமானாக நோவாவைக் கண்டு அவர் நோவாவை அழைத்து அவரிடம் ஒரு பேழையை செய்யச் சொல்லி அதனுள் அதனுள் அவரது மனைவி,மகன்களான சேம்,ஆம் சாபேத்து என்பவர்களையும் அவர்களின் மனைவியினரையும் மேலும் உலகில் உள்ள எல்ல விலங்குகளிலும் ஒவ்வொரு சோடியையும் விலங்குகளுக்கும் குடும்பத்தாருக்கும் வேண்டிய உணவையும் பேழைகுள் சேர்க்கச் சொன்னார்.. இது கிறித்துவர்களின் பழைய ஏற்பாட்டில் (Old Testament) கூறப்பட்டது..

இந்த இரண்டு கதைகளும் ஒரே போல் இருக்க காரணம் என்ன..??



2. கன்னித்தன்மையை இழக்காமல் குழந்தை பெற்ற மேரி & குந்திதேவி

   i) துர்வாச முனிவர் குந்தியிடம் வரும்காலத்தில் இறைவன் மூலம் நீ ஒரு குழந்தைக்கு கன்னித்தாயாக போகிறாய் என கூற அதனை சோதித்து பார்க்க எண்ணி குந்திதேவி சூரியனை அழைக்க, சூரியபகவான் மூலம் கன்னித்தன்மை இழக்காமலேயே கர்ணனனை மகனாக பெற்றார். இது மகாபாரதத்தில் கூறியுள்ளது..

   ii) இறைத்தூதர் கேப்ரியேல் புனித மேரியிடம் அவர் இறைவனின் தூயஆவியின் மூலம் யேசுவை கன்னித்தன்மை இழக்காமலேயே பெறுவார் என்று தெரிவிக்க.. அவ்வண்ணமே மேரி குழந்தை யேசுவை பெற்றார். இது விவிலிய புதிய ஏற்பாட்டில்  கூறியுள்ளது..

இந்த இரண்டு கதைகளும் ஒரே போல் இருக்க காரணம் என்ன..??



3. அனுனாக்கி (Anunakki) & கருடாழ்வார்


                 

                அனுனாக்கி                                                            கருடாழ்வார்
      (சுமேரியரின் கடவுள்)                                        (இந்துக்களின் கடவுள்)


இப்போது ஈராக் என்று அழைக்கப்படும், முன்னர் மெசபடோமியா என்று அழைக்கப்பட்ட இடத்தில் ஏறத்தாழ 4500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சுமேரியர்களின் கடவுள் அனுனாக்கியும், இந்துக்களின் கடவுள்களில் ஒருவரான கருடாழ்வாரும் ஏன் ஒரே மாதிரி இருக்கிறார்கள்..?? இல்லை இருவரும் ஒருவரா..??

குழப்பமாக இருக்கிறதா..?? இல்லை இது தான் ஆரம்பம்.. இனி இன்னும் குழப்புவேன்..


- தொடரும்..


( உங்கள் கருத்துக்களை கண்டிப்பாக பதிக்கவும்.. மேலும் எழுத எனக்கு உதவியாக இருக்கும்.. )

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

எசேக்கியேலின் விண்கலம்..

[ இது abovetopsecret.com என்ற தளத்தில் பதியப்பட்ட ஒரு பதிப்பின் மொழி மாற்றம் மட்டுமே.. யார் நம்பிக்கையையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை..]

இறைத்தூதர் இசக்கியேல் (Ezekiel) வானத்திலிருந்து வந்த வெண்கலம் போல
மின்னிய,சக்கரங்கள் உடைய ஒரு விண்கலத்தை பற்றி பழைய ஏற்பாட்டில் (Old Testament) கூறியுள்ளார். அமெரிக்கா நாசா-வில் பணிபுரியும் பொறியாளர் திரு.ஜோசப் ப்ளம்ரிச் அவர்கள் இறைத்தூதர் இசக்கியேல் கூறிய விண்கலத்தை கணினியில்  வடிவமைத்துள்ளார். அதனை பற்றியதே இந்த பதிவு..





கி.மு 592-ல் யாரோ (அல்லது ) எதுவோ வானத்தின் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வந்தது..

                                                                                                - பழைய ஏற்பாட்டில் கூறியுள்ளபடி..



 




”நான் கண்ட காட்சியாவது: இதோ வடக்கிலிருந்து புயல் காற்றெழும்பிற்று@ அப்போது பெரியதொரு மேகத்தையும், அதன் நடுவில் நெருப்பினுள்ளிருந்து துலங்கி மின்னிய ஒரு வகை வெண்கலத்தின் உருவத்தையும் கண்டேன்.”

 -எசக்கியேல் 1:4

"I looked, and I saw a windstorm coming out of the north 
An immense cloud with flashing lightning and surrounded by brilliant light. 
The center of the fire looked like glowing metal." 

- Ezekiel 1:4 



”அதன் நடுவில் நான்கு மிருகங்களின் சாயல் காணப்பட்டது@ அவற்றின் உருவமோ மனித சாயலாய் இருந்தன.”

”அவற்றுள் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும் நான்கு இறக்கைகளும் இருந்தன.”

 -எசக்கியேல் 1:5,6


"And in the fire was what looked like four living creatures. 
In appearance their form was human, but each of them had four faces and four wings." 

- Ezekiel 1:5,6 




”அவற்றின் கால்கள் நேரானவை@ உள்ளங்கால்கள் கன்றுக் குட்டியின் உள்ளங்கால்களைப் போல் இருந்தன@ அவை துலக்கப்பட்ட வெண்கலம் போல மின்னின.”

அவற்றின் நான்கு பக்கங்களிலும் இறக்கைகளின் கீழ் மனித கைகள் இருந்தன. மிருகங்களுள் ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்களும் நான்கு இறக்கைகளும் இருந்தன.”

 -எசக்கியேல் 1:7,8


"Their legs were straight; 
their feet were like those of a calf and gleamed like burnished bronze. 

Under their wings on their four sides they had human hands. 
All four of them had faces and wings." 


- Ezekiel 1:7,8 



”அவை நடக்கும்போது அவற்றின் இறக்கைகளால் ஏற்பட்ட ஒலியைக் கேட்டால், பெருக்கெடுத்து ஒடிவரும் தண்ணீரின் இரைச்சல் போலும், எல்லாம் வல்லவரின் குரலொலி போலும், திரண்டு செல்லும் சேனைகளின் ஆரவாரம் போலும் இருக்கும்@ அவை நிற்கும் போது தங்கள் இறக்கைகளைத் தாழ்த்தி விடும்.”

 -எசக்கியேல் 1:24


"When the creatures moved, I heard the sound of their wings, 
like the roar of rushing waters, like the voice of the Almighty, 
like the tumult of an army. When they stood still, they lowered their wings." 

- Ezekiel 1:24 



 ”அவை நான்கிற்கும் முன் பக்கத்தில் மனித முகமும், வலப்புறத்தில் சிங்க முகமும், இடப்புறத்தில் எருது முகமும், பின் பக்கத்தில் கழுகு முகமும் இருந்தன.”

 -எசக்கியேல் 1:10


"Their faces looked like this: 

Each of the four had the face of a human being, 
and on the right side each had the face of a lion, 
and on the left the face of an ox; each also had the face of an eagle." 


- Ezekiel 1:10 



”அவற்றின் முகங்கள் இவ்வாறிருக்க, இறக்கைகள் உயர்ந்து விரிந்திருந்தன. அவை ஒவ்வொன்றின் இறக்கைகள் நான்கில் இரண்டும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன, மற்ற இரண்டும் அவற்றின் உடலை மூடிக்கொண்டிருந்தன.”

அவை ஒவ்வொன்றும் நேர்த்திசையிலேயே நடந்தன. எங்கே போகவேண்டுமென ஆவி அவற்றை ஏவுமோ, அங்கே அவை போகும்@ போகும் போது அங்குமிங்கும் திரும்பிப் பார்க்கவே மாட்டா.”

 -எசக்கியேல் 1:11,12



"Such were their faces. They each had two wings spreading out upward, 
each wing touching that of the creature on either side; 

And each had two other wings covering its body. Each one went straight ahead. 
Wherever the spirit would go, they would go, without turning as they went." 

- Ezekiel 1:11,12 


” நான் அம் மிருகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவை ஒவ்வொன்றின் அருகிலும் பூமியில் ஒரு சக்கரம் தென்பட்டது@ அவற்றுக்கும் நன்னான்கு முகங்கள் இருந்தன.”

சக்கரங்களின் உருவமும் அவற்றின் வேலைப்பாடும் கடல் நீரைப் போல நீல வண்ணமாய் இருந்தன@ அவை நான்கும் ஒரே வடிவமுள்ளவையாய்க் காணப்பட்டன. சக்கரத்துக்குள் சக்கரம் இருப்பது போலத் தோன்றின. இவ்வாறு அவற்றின் அமைப்பும் வேலைப்பாடும் இருந்தன.”

 -எசக்கியேல் 1:15,16


"As I looked at the living creatures, I saw a wheel on the ground 
beside each creature with its four faces. 

This was the appearance and structure of the wheels: 
They sparkled like topaz, and all four looked alike. 
Each appeared to be made like a wheel intersecting a wheel." 

- Ezekiel 1:15,16 


”மிருகங்கள் போகையில் சக்கரங்களும் போயின. அவை நிற்கையில் இவையும் நின்றன@ அவை பூமியினின்று மேலே எழும்புகையில் சக்கரங்களும் அவற்றோடு மேலே எழுந்தன@ ஏனெனில் மிருகங்களின் ஆவி சக்கரங்களில் இருந்தது.”

 -எசக்கியேல் 1:21


"When the creatures moved, they also moved; 
when the creatures stood still, they also stood still; 
and when the creatures rose from the ground, the wheels rose along with them, 
because the spirit of the living creatures was in the wheels." 

- Ezekiel 1:21 


”அம் மண்டலத்தின் கீழ் அவற்றின் இறக்கைகள் ஒன்றுக் கொன்று எதிராக நிமிர்ந்து நின்றன@ மிருகம் ஒவ்வொன்றும் தன் இறக்கைகள் இரண்டினால் தன் உடலை மூடிக் கொண்டிருந்தது.”

 -எசக்கியேல் 1:23


"Spread out above the heads of the living creatures 
was what looked something like a vault, sparkling like crystal, and awesome. 
Under the vault their wings were stretched out one toward the other, 
and each had two wings covering its body." 

- Ezekiel 1:23 


”அவற்றின் தலை மீது படர்ந்து நின்ற மேக மண்டலத்தில் குரலொலி கேட்டது@ மிருகங்கள் நிற்கும் போது இறக்கைகளைத் தளர விடும்.

அவற்றின் தலை மீதிருந்த மண்டலத்தின் மேல் மரகதத்தால் ஆன அரியணை போல் ஒன்று தென்பட்டது@ அந்த அரியணையில் மனிதனைப் போன்ற உருவம் ஒன்று வீற்றிருந்தது.

அவர் உடலின் உள்ளும் புறமும் சுற்றிலும் தீயொளி போல மின்னிய ஒருவித வெண்கலத்தின் உருவத்தைக் கண்டேன்@ இடுப்பிலிருந்து மேலும் கீழும் சுற்றிலும் நெருப்பு மயமாய் ஒளிரும் பிரகாசத்தைக் கண்டேன்.

அரியணையைச் சூழ்ந்திருந்த ஒளி மழைக்காலத்தில் மேகத்தில் தோன்றும் வானவில்லைப் போல் இருந்தது. ஆண்டவரது மாட்சியினுடைய சாயலின் காட்சி இவ்வாறு தோன்றிற்று@ நான் அதைப் பார்த்த போது முகங்குப்புற விழுந்தேன்@ அப்போது ஒருவரின் பேசுங்குரல் கேட்டேன்.”

 -எசக்கியேல் 1:25-28



"Then there came a voice from above the vault over their heads as they stood 
with lowered wings. Above the vault over their heads was what looked like a throne 
of lapis lazuli, and high above on the throne was a figure like that of a man. 

I saw that from what appeared to be his waist up he looked like glowing metal, 
as if full of fire, and that from there down he looked like fire; 
and brilliant light surrounded him. 

Like the appearance of a rainbow in the clouds on a rainy day, 
so was the radiance around him. 

This was the appearance of the likeness of the glory of the Lord. 
When I saw it, I fell facedown, and I heard the voice of one speaking." 

- Ezekiel 1:25-28 






SOURCES: 



சனி, 5 ஜனவரி, 2013

விமானத்திலிருந்து படம் பிடிக்கப்பட்ட பறக்கும்தட்டு.. [NEW]

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலிருந்து கிளம்பிய விமானத்தில் பயணித்த ஒருவரால் எடுக்கப்பட்ட ஒரு புதிய பறக்கும் தட்டு வீடியோ..

இந்த வீடியோ குறித்து அவர் கூறுவது..




Well I been keeping a secret for a long time and this is NON wrestling related. Recently my brother was on a flight back from Florida and they were over the ocean and were told they were over 30,000 feet high. My brother just happened to be filming outside his window and what he captured was amazing and shocking. This is not some bullshit video as it is 100% real. Other passengers on the plane at the window saw the same thing but only my brother and another lady had time to shoot it. 
My brother not only shot it but took video of it. It clear is a UFO and the shocking thing is this thing did not move. It was hovering and its not a weather balloon or sate-light . It has a large glowing blue dome and is glowing and as the plane moved it stayed still. It also appeared to just hover there and was bigger than a bill board you would see on a highway and the shape is almost a triangle. 
The FAA is already aware of it as it was reported by people on the flight and the pilots ran out of the cock pit as soon as the plane landed. Tommy Dreamer actually met with my brother to view the footage and he is even shocked at it. There is an investigation under way as this is clearly something out of a UFO movie. He is also contacting CNN and other media outlets about this.








செவ்வாய், 1 ஜனவரி, 2013

வானத்தில் ஒரு விந்தையான வெடிப்பு..


சாக்ரமெண்டோ,கலிஃபோர்னியா :

                                சாக்ரமெண்டோ பகுதியை சேர்ந்தவர் Elijah Prychodzko இவர் கடந்த டிச.20ம் தேதி தனது டெலஸ்கோப்பில் வானத்தை பார்த்து கொண்டிருந்த போது இவர் ஒரு பெரிய வெளிச்சமான கிரகம் போன்ற ஒன்றையும் அதனை சுற்றும் ஒரு சிறிய பொருளையும் கண்டார். அவரிடம் உள்ள மொபைல் போனின் உதவியோடு பதிவு செய்த காட்சிகள் பார்வையாளர்களையும், வானியல் ஆய்வாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

ஏனென்றால் யாருக்கும் இந்த நிகழ்சி என்னவென்று தெரியவில்லை. இந்த வீடியோவை காட்டி வானியல் ஆய்வாளரான Dr. Stephen P Maran அவர்களிடம் கருத்து கேட்ட போது இது போன்ற காட்சியை தான் இதுவரை கண்டதில்லை என்றும், இது ஒரு கிரகங்கள் (அ) வானியல் சார்ந்ததாக இருக்க முடியாது என தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் இதனை பற்றிய தகவலறிந்த அமெரிக்க தொலைக்காட்சியான CBS13 இது பற்றிய வீடியோவினை வெளியிட்டுள்ளது..

அது உங்களின் பார்வைக்கு.. 



ஆதாரம்: SBS13