Did you Saw a UFO..??

You saw Something in the Sky which you cant explain..??
Please report it to MUFON (Mutual UFO Network)

MUFON Link

ParakkumThattu ®

ParakkumThattu ®

சனி, 11 ஆகஸ்ட், 2012

2012 -ம் மாயா இன மக்களும்.. 1


"இந்த கட்டுரை தொடர் திரு.ராஜ்சிவா அவர்களால் உயிர்மை.காம் தளத்தில் எழுதப்பட்டது. முழுகாப்புரிமை படைப்பாளரையே சாரும்.. 

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
2012 -ம் மாயா இன மக்களும்.. 


இன்னும் ஒரிரு மாதங்களில், 2012ம் ஆண்டு புதுவருடமாகப் பிறக்கப் போகிறதுஇந்த நேரத்தில்பலர் பயத்துடன் பார்க்கும் ஒன்று உண்டென்றால்அது '2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறதுஎன்ற விந்தையான செய்திக்கு உலக ஊடகங்கள் பல கொடுக்கும் முக்கியத்துவம்தான்.
"சரியாக இன்னும் ஒரு வருடத்தில் உலகம் அழியப் போகிறதா?" என்பதே பலரின் கேள்வியாகவும், பயமாகவும் இருக்கிறது.

இது பற்றி அறிவியலாகவும்அறிவியலற்றதாகவும் பலவித கருத்துக்களும்ஆராய்ச்சிகளும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கிறதுஅப்படி இந்த அழிவை ஏன் முக்கியப்படுத்த வேண்டும் என்று பார்த்தால்எல்லாரும் சுட்டிக் காட்டுவது ஒன்றைத்தான்.

அது….! 'மாயா'.
மாயா இனத்தவர்களுக்கும், 2012ம் ஆண்டு உலகம் அழியப் போகிறது என்பதற்கும் என்ன சம்பந்தம்இவர்கள் இந்த அழிவு பற்றி ஏதாவது சொன்னார்களாஅப்படிச் சொல்லியிருந்தால்என்னதான் சொல்லியிருப்பார்கள்அதை ஏன் நாம் நம்ப வேண்டும்இப்படிப் பல கேள்விகள் எமக்குத் தோன்றலாம்.

இது போன்ற பல கேள்விகளுக்கு ஒரு விரிவான ஆராய்ச்சித் தொடர் மூலம் உங்களுக்குத் பதில் தரலாம் என்ற நினைத்தே உங்கள் முன் இந்தத் தொடரைச் சமர்ப்பிக்கிறேன்.
என்ன என்பது இது பற்றி விளக்கமாகப் பார்க்கலாமா…..?
உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் வீட்டில் வசித்த அனைவரும்ஒருநாள் திடீரென அந்த வீட்டிலிருந்துஅவர்கள் இருந்த சுவடே இல்லாமல் மறைந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்திகைத்துப் போய்விட மாட்டீர்களா?ஆச்சரியத்துக்கும்மர்மத்துக்கும் உள்ளாகுவீர்கள் அல்லவா?

சரிஅதுவே ஒரு வீடாக இல்லாமல்உங்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பக்கத்துத் தெருவே திடீரென ஒரே இரவில் மறைந்தால்….? ஒரு தெருவுக்கே இப்படி என்றால்ஒரு ஊர் மக்கள் மறைந்தால்….? ஒரு நாட்டு மக்கள் மறைந்தால்….?

ஆம்....! வரலாற்றில் இது நடந்ததுஒரு நாட்டில் வாழ்ந்தமிக மிக மிகச் சிறிய அளவினரை விடமற்ற அனைத்து மக்களும்திடீரென அந்த நாட்டிலிருந்து ஒட்டுமொத்தமாக மறைந்துவிட்டார்கள்சரித்திரத்தில் எந்த ஒரு அடையாளங்களையும்மறைந்ததற்குச் சாட்சிகளாக வைக்காமல் மறைந்து போனார்கள்.


ஏன் மறைந்தார்கள்எப்படி மறைந்தார்கள்என்னும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை மட்டுமே மிச்சம் வைத்துவிட்டுமாயமாய் மறைந்து போனார்கள்எங்கே போனார்கள்எப்படிப் போனார்கள்யாருக்கும் தெரியவில்லை.எதுவும் புரியவில்லை.

இந்த மறைவின் மர்மத்தை ஆராயஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் சென்ற ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்தது எல்லாமே ஒரு மாபெரும் அதிர்ச்சிகள்மாயாக்கள் விட்டுச் சென்ற சுவடுகளை ஆராய்ந்த அவர்கள் பிரமிப்பின் உச்சிக்கே போனார்கள்.

அறிவியல் வளரத் தொடங்கிய காலகட்டங்களில்இவை உண்மையாக இருக்கவே முடியாதுஎன்னும் எண்ணம் அவர்களுக்குத் தோன்றும்படியான பல ஆச்சரியங்களுக்கான ஆதாரங்கள் கிடைத்தனஅவை அவர்களை மீண்டும் மீண்டும் திக்குமுக்காடச் செய்தது.

இது சாத்தியமே இல்லாத ஒன்றுஇதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என அறிஞர்கள் சிலர் பிரமிக்கபலர் பின்வாங்கத் தொடங்கினார்கள்.
மாயா என்றாலே மர்மம்தானாஎன நினைக்க வைத்தது அவர்கள் கண்டுபிடித்தவை.


சரிஅப்படி என்னதான் நடந்ததுஆராய்ச்சியாளர்கள் அப்படி எதைத்தான் கண்டு கொண்டார்கள்ஆராய்ந்த சுவடுகளில் அப்படி என்னதான் இருந்தது?
இவற்றையெல்லாம் படிப்படியாக நாம் பார்க்கலாம்ஒன்று விடாமல் பார்க்கலாம்அவற்றை நீங்கள் அறிந்து கொண்டால்இதுவரை பார்த்திராதகேட்டிராதஆச்சரியத்தின் உச்சத்துக்கே போய்விடுவீர்கள்.

அவை என்ன என்பதை அடுத்து நாம் பார்ப்போமா……..!


 நன்றிராஜ்சிவா / உயிர்மை.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக